Published : 16 Nov 2023 06:18 AM
Last Updated : 16 Nov 2023 06:18 AM

ப்ரீமியம்
கந்தசஷ்டி திருவிழா: குருவாய் அருளும் முருகப்பெருமான்

ஆணவம், கன்மம், மாயை என்கிற முக்குணங்களின் வசம் மனிதன் சிக்கிக்கொள்ளும்போது மனிதன், அசுரனாகிவிடுகிறான். இந்த மூன்று குணங்களை இறைவன் அழித்து குருவாய் வந்து ஆட்கொள்வதுதான் கந்தபுராண தத்துவம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர் முருகப்பெருமான். முருகப்பெருமான் அவதார நோக்கமே நமக்குள் இருக்கும் அசுரக் குணத்தை அழித்து குருவாக வந்து ஆட்கொள்வதுதான். இதுதான் கந்த சஷ்டி திருவிழா. ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த திதியான பிரதமை திதியில் தொடங்கி சஷ்டி திதியில் சூரபத்மனை சம்ஹாரம் செய்வதுதான் கந்த சஷ்டி திருவிழா.

பார்வதி தேவியின் தந்தையான தட்சன், அடுத்த பிறவியில் சூரபத்மனாக அவதரித்தார். சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கேட்ட வரத்தைப் பெற்ற சூரபத்மன், தேவர்களை அழிக்கத் தொடங்கினார். சூரபத்மனின் சகோதரர்கள் சிங்க முகன், தாரகாசூரன். இந்த மூன்று பேரையும் வதம் செய்வதே முருகப்பெருமானின் அவதார நோக்கம். இவர்கள் மூன்று பேரும்தான் ஆணவம், கன்மம், மாயை. சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் ஒற்றைக் காலில் சூரியனை நோக்கி நூறு ஆண்டுகள் தவம் புரிந்து, ஈசனிடம் வரம் பெற்றவர். தாரகாசூரன் என்றால் ‘முக்தியின் அரக்கன்’ என்று பொருள். சூரபத்மனை வதம் செய்ய அம்மை அப்பனிடம் வேல் வாங்கிய முருகப்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x