

இயற்கை விவசாயத்துக்கு மாடு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் தொழுவத்தில் அடைத்துவைத்துச் சாணத்தையும் சிறுநீரையும் சேகரிக்கும் “உரம் தயாரிக்கும் இயந்திரமாக” மட்டுமே பயன்படுத்துவது நம் பாரம்பரியம் அல்ல.
“மாடு மாதிரி நுனிப்புல் மேயாதே” என்ற பழமொழியில் ஓர் ஆழமான அறிவியல் உள்ளது. மாடு ஒரு செடியின் நுனியை மட்டும் கடிக்கும்போது, அந்தச் செடி தற்காப்பாகக் கசப்புத் தன்மையை வெளிப்படுத்தும்.
அதனால் மாடு அதை மீண்டும் கடிக்காமல் அடுத்த செடிக்கு நகரும். அதேநேரம், மாட்டால் கடிக்கப்பட்ட அந்தச் செடி, வேர்ச் சுரப்பிகளை அதிகளவில் சுரந்து, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அதிவேகமாகப் பெருக்கி நிலத்தைச் செழுமையாக்கும்.