

பண்ணையில் தனது பசுக்களுடன் தினேஷ்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பொறியியல் பட்டம் பெற்றவர்.
2018இல் தன் 23வது வயதில் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் கீரை விவசாயம் செய்யத் திட்டமிட்டு, பின்னர் ஓர் ஒற்றை நாட்டுப் பசுவுடன் கால்நடை வளர்ப்பைத் தொடங்கினார்.
இன்று 200க்கும் மேற்பட்ட பசுக்களுடன் ‘பால் டப்பா’ எனும் பிராண்ட் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் A2 பாலை நேரடியாக விநியோகித்துத் தனிமுத்திரை பதித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டக் காலத்தில் நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தபோது, ஆரோக்கியமான A2 பால் விநியோகத்தில் நல்ல வாய்ப்பிருப்பதை உணர்ந்த தினேஷ் இதில் களமிறங்கினார்.