Published : 16 May 2023 06:12 AM
Last Updated : 16 May 2023 06:12 AM

ப்ரீமியம்
வானத்தை வசப்படுத்தும் சென்னை இளைஞர்!

இரவு வேளையில் வானத்தை ரசிக்க யாருக்குத்தான் பிடிக்காது? அழகான நிலாவும் வானத்தில் இறைத்தாற்போல் ஜொலிக்கும் நட்சத்திரங்களும் இயற்கை அற்புதங்கள். அந்த ரம்மியமான இரவுக் காட்சிகளை ஒளிப்படங்கள் எடுக்க என்றைக்காவது நீங்கள் முனைந்திருக்கிறீர்களா? ஆனால், அப்படிப்பட்ட அற்புதமான ஒளிப்படங்கள் எடுப்பதைத் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாற்றி வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ஆகாஷ் ஆனந்த்.

ஆகாஷ் ஆனந்த்

வெறும் கண்கள் போதும்: விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு, விளம்பரத் துறையில் வேலை என்றிருந்த ஆகாஷுக்கு 2016இல் வானியல் ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம் துளிர்த்திருக்கிறது. நிலவின் பல்வேறு தோற்றங்கள், பால்வெளி மண்டலம், நட்சத்திரங்கள், வானியல் அற்புதங்கள் எனப் பலவற்றைப் படமெடுத்திருக்கும் இவருடைய ஒரு படைப்பு பிரபல ஸ்பேஸ்.காம் தளத்தில் சிறந்த 100 வானியல் ஒளிப்படங்களில் ஒன்றாக 2016இல் பட்டியலிடப்பட்டது. வெகுதொலைவில் இருக்கும் வானியல் காட்சிகளை ஒளிப்படம் எடுப்பது மிகவும் கடினம் என்கிற பிம்பத்தை ஆகாஷ் உடைத்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x