Published : 14 May 2023 08:44 AM
Last Updated : 14 May 2023 08:44 AM
வீட்டு வேலை மட்டுமே பெண்களுக்கானது என்கிற காலம் மாறிவிட்டது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டனர். வேலை சார்ந்து பல முன்னேற்றங்களை அடைந்துவிட்டாலும் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் பெண்களுக்கான உரிமை இன்றும் சில இடங்களில் மறுக்கப்படுகிறது. ஆண்களே செய்யத் தயங்கும் ஆதரவற்றோரின் உடல் நல்லடக்கப் பணிகளை கோவை, மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த ‘ஜீவ சாந்தி அறக்கட்டளை’ அர்ப்பணிப்புடன் செய்துவருகிறது.
கடந்த 13 ஆண்டுகளாகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை இந்த அறக்கட்டளை நல்லடக்கம் செய்துள்ளது. இந்தச் சமூகப் பணியின் அடுத்த கட்டமாக தொடங்கப்பட்டதுதான் ‘வுமன் வாரியர்ஸ்’ அணி. ஆதரவற்ற பெண் சடலங்களைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக மீட்டு உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்துவருகிறது இந்த அணி. எந்த நேரத்திலும் களத்துக்குச் செல்லத் தயாராக இருக்கும் இந்தப் பெண்கள் அணியை ஷாஹனாஸ் பர்வீன் ஒருங்கிணைக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT