Published : 28 Jan 2023 03:41 PM
Last Updated : 28 Jan 2023 03:41 PM

ப்ரீமியம்
திரை (இசைக்) கடலோடி 25 | கண்ணதாசனின் மதம் கடந்த கவித்துவம்!

திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் துணை.சோதனைச் சுழலில் சிக்கித் தவிக்கும் மனித குலத்துக்கு ஆறுதலும் ஆதரவும் தருவது இறை நம்பிக்கை ஒன்றுதான். எந்த மதத்தவராயினும் சரி, எந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் சரி.. கஷ்டம் வரும்போது கடவுளை நினைக்கத்தான் வேண்டும். அப்படி பரமபிதாவின் அருளை ஒரு இளம்பெண் யாசிக்கும் பாடல் தான் 1964இல் வெளிவந்த 'கறுப்புப் பணம்' படத்தில் இடம் பெற்ற பாடல் முத்து.

ஜி. ஆர். நாதன் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்துக்குக் கதை, வசனம், பாடல்களை எழுதித் தயாரித்ததோடு நிற்காமல் ஒரு முக்கியக் வேடத்தில் நடித்தும் இருந்தார் கவியரசர் கண்ணதாசன். இந்தப் படத்தில் நடிகை சந்திரகாந்தா தேவாலயம் ஒன்றில் உள்ளம் உருக வேண்டிப் பாடும் பாடல் தான் 'உந்தன் ராஜசபை இங்கு வாராதோ' என்று மெல்லிசை மன்னர்களின் இசையில் இசைக்குயில் எஸ். ஜானகி உள்ளம் உருக்கும் குரலில் பாடிய பாடல். கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை கவியரசர் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தால் இவ்வளவு சிறப்பாக எழுதி இருப்பார் என்று வியக்க வைக்கிறது அவரது கைவண்ணம். மெல்லிசை மன்னரின் இசை வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் இசையை வெளிக்கொண்டுவருவதில் அவரது தன்னிகரில்லாத திறமைக்கு ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x