Last Updated : 26 May, 2022 01:10 PM

 

Published : 26 May 2022 01:10 PM
Last Updated : 26 May 2022 01:10 PM

ப்ரீமியம்
ஞெகிழியை மட்கச் செய்யும் நொதியைக் கல்லறையில் கண்டறிந்த அறிவியலாளர்கள்

ஞெகிழி கழிவே இன்றைய தேதியில் உலகின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தல். ஞெகிழி கழிவுகளிலிருந்து கடலையும், அதில் வாழும் உயிரினங்களையும், அவற்றை உண்ணும் நம்மையும் மீட்டெடுத்துக் காக்கும் விதமாகப் பல முன்னெடுப்புகளைச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அழியாத்தன்மை பெற்றுள்ள ஞெகிழியிடமிருந்து இந்தப் பூவுலகைக் காக்கும் வழிதெரியாமல் உலக நாடுகள் அல்லாடி வருகின்றன.

ஞெகிழியின் கழிவு பரவாத இடம் இன்று இப்பூவுலகில் இல்லை. சாக்கடைகள், நீர்நிலைகள், சாலைகள், ஏன் அண்டார்க்டிகாவின் அடியாழத்தில் கூட ஞெகிழி கழிவு பரவியிருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அனைத்து நிகழ்வுகளிலும் நெகிழி கழிவு இன்று அங்கமாக நிறைந்திருக்கிறது. தொடர்ந்து சூரிய வெப்பத்திலும் தண்ணீரிலும் அடித்துச் செல்லப்படும் ஞெகிழி சிறுசிறு துகள்களாக உடையுமே ஒழிய, அதன் வேதி வடிவம் முழுமையாக மாறாது. இப்படி உடையும் நுண்ஞெகிழித் துகள்கள், நாம் குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று என எங்கும் கலந்திருக்கின்றன. உயிரின உணவுச் சங்கிலிக்குள்ளும், மனித உணவுச் சங்கிலிக்குள்ளும் ஞெகிழி புகுந்து பல்லாண்டுகளாகிவிட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x