Published : 11 Jan 2024 06:00 AM
Last Updated : 11 Jan 2024 06:00 AM
கையில் கிடைக்கும் தாள்களைக் கிழித்தெறியும் வயதிலேயே நான் வண்ணப் படங்களைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். புத்தகம் வாசிக்கும் பழக்கம் என் பாட்டியிடமிருந்துதான் எனக்கு வந்தது. பாட்டியும் அம்மாவும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். நான் விளையாடி அலுத்தபோது பாட்டிதான் அம்புலிமாமா, பாலமித்ராவை அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு சித்திரக்கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு ஜாவர் சீதாராமன், தேவன் போன்றவர்கள் என் பாட்டியின் நூலகச் சேமிப்பிலிருந்து எனக்கு அறிமுகமானார்கள். விக்கிரமாதித்யன் கதைகளைப் படித்து முடித்த பிறகு என் தேடல் அதிகமானது. திருச்சிக்கு அருகில் இருக்கும் முசிறி என்கிற சிற்றூரில் உள்ள அரசு நூலகமே என் சரணாலயமானது. மர அலமாரிகளில் புத்தகங் களின் வரிசையும் பழைய மின்விசிறியும் தேய்ந்த மர இருக்கைகளும் மூலையில் இருந்த மண் பானையும் இன்றும் என் நினைவில் பத்திரமாக இருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT