Published : 26 Jul 2023 06:08 AM
Last Updated : 26 Jul 2023 06:08 AM

ப்ரீமியம்
கதை: சிறுவனிடம் சிக்கிய கடத்தல்காரர்கள்!

என் பெயர் சாம். என் நண்பன் பில் டிரிஸ்கோல். நாங்கள் இருவரும் குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தோம். எங்களிடம் 500 டாலர்கள் மட்டுமே இருந்தன. இன்னும் 2 ஆயிரம் டாலர்கள் எங்களுக்குத் தேவைப்பட்டன. அதற்காக ஒரு பணக்காரச் சிறுவனைக் கடத்தி, பணம் பறிக்கத் திட்டமிட்டோம். பக்கத்து மலையில் உள்ள குகையில் உணவுப் பொருள்களை வாங்கி வைத்தோம்.

நாங்கள் அந்த ஊருக்குச் சென்றபோது எபிநேசர் டார்செட்டின் மகன், ஆரஞ்சு மரத்திலிருந்த ஒரு பழத்தைக் கல்லால் அடிக்கக் குறிபார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் அவனைக் கூப்பிட்டதும், கையில் இருந்த கல்லை பில் மீது எறிந்தான். வலியில் துடித்த பில், “இதற்கு இவன் அப்பாவிடம் 500 டாலர்கள் கூடுதலாக வாங்க வேண்டும்” என்றான். 9 வயதுச் சிறுவனாக இருந்தாலும் எங்களால் அவனை எளிதாகப் பிடிக்க முடியவில்லை. திடீரென்று என்ன நினைத்தானோ, அவனே எங்களுடன் வந்துவிட்டான். குதிரை வண்டியில் மலைக்குச் சென்றுவிட்டோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x