Published : 16 Jun 2023 06:18 AM
Last Updated : 16 Jun 2023 06:18 AM

ப்ரீமியம்
சினிமா ரசனை 2.0 | பகுதி 2 - பதின்மத்தின் வர்ணஜாலம்!

தொடரின் நாயகி ஆமிபெத்துடன் இயக்குநர் மொரியா

திரைப்படங்களில் ஒரு முக்கியமான வகை ‘Coming of Age'. பால்ய வயது முடிந்து, ‘டீன் ஏஜ்’ என்று நாம் கூறுகிற பதின்மப் பருவத்துக்குள் நுழைந்து குழந்தைகள் வளரும்போது, அவர்கள் மனங்களில் ஏற்படும் மாறுதல், தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளல், அதன்மூலம் ஒரு தனிப்பட்ட ஆளுமை உணர்வை வளர்த்துக்கொள்ளல் என்று எத்தனையோ மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். நாமுமே அப்படி வளர்து வந்தவர்கள்தான். இந்த மாற்றங்களைத் திரைப்படங்களில் பேசினால் அதுதான் ‘Coming of Age' என்கிற வகை. கவிதைத் தமிழில் சொல்வதெனில் பதின்மத்தின் வர்ணஜாலம் எனலாம்.

உதாரணமாக, தமிழில் பாலு மகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்தைச் சொல்லமுடியும். ‘சம்மர் ஆஃப் 42’ (Summer of '42) என்கிற படத்திலிருந்து தழுவப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் வாழும் சிறுவர்கள் பற்றிய மறக்கமுடியாத படம். மூன்று சிறுவர்கள் டீன் ஏஜை நோக்கிச் செல்கையில் அவர்களின் மனங்களில் ஏற்படும் மாறுதல்கள் அற்புதமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும். (இப்படத்தில் கமல்ஹாசன் இருக்கிறார்! டைட்டிலில் அவர் பெயர் வராது).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x