Last Updated : 11 Jun, 2023 08:52 AM

 

Published : 11 Jun 2023 08:52 AM
Last Updated : 11 Jun 2023 08:52 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 19: முட்டைகோஸ்

பத்ரகாளி பட்டிக்காட்டிலேயே பிறந்து பட்டிக்காட்டிலேயே வளர்ந்தவள். மற்றபடி அவளுக்குப் பட்டணத்தில் இருப்பவர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கைமுறை பற்றியும் எதுவும் தெரியாது. அதுவும் அவள் ஊரான பட்டிக்காட்டில் அவளுடைய அய்யா ஆடு மேய்த்தார். இவளும் அவருடன் சேர்ந்து பகலெல்லாம் ஆடு மேய்ப்பாள். வீட்டு வேலையெல்லாம் அவள் அம்மாவும் அக்காவும் செய்துவிடுவதால் இவளுக்கு ஆடு மேய்க்க வேண்டியது, இரவில் கெடையில் போடவேண்டியது, வீட்டுக்கு வந்து வட்டில் நிறைய சோறும் குழம்பும் சாப்பிட்டுவிட்டு மந்தையிலோ தெருவிலோ படுக்கப்போய்விடுவது... இதுதான் வேலை.

அவள் அத்தை மகன் சின்னசாமிக்குப் பட்டணத்தில் அதிசயத்திலும் அதிசயமாக போலீஸ் வேலை கிடைத்துவிட்டது. அந்த ஊரில் கவர்மென்ட் வேலை என்பதே கிடைக்காத ஒரு பொருளாக இருந்தது. அப்படி இருக்கும்போது சின்னசாமிக்கு கவர்மென்ட் வேலை கிடைத்தால் விடுவார்களா? உடனே பத்ரகாளியின் அம்மா, “என் மருமகன் பட்டணத்தில் வேலை பார்க்கிறாக. அங்க இருக்க பட்டணத்துப் பொம்பளைக எல்லாம் இப்படி வேலை பாக்குற ஆம்பளைகளைக் கண்டால் விடவே மாட்டாங்களாம். அதனால இந்த மூகூர்த்தத்திலேயே என் மவளை அவுகளுக்குக் கட்டிவச்சிட்டுத்தேன் மறுவேலை பார்க்கணும்” என்று சொன்னாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x