Published : 09 Oct 2017 08:24 PM
Last Updated : 09 Oct 2017 08:24 PM
பிபா யு-17 உலகக்கோப்பைக் கால்பந்தில் பிரிவு பி போட்டியில் ஆப்பிரிக்க அணியான மாலி, துருக்கி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
தங்கள் முதல் போட்டியில் பராகுவேயிடம் 2-3 என்ற கோல் கணக்கில் மாலி அணி போராடி தோல்வி தழுவிய பிறகு இன்று நவி மும்பையில் டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் துருக்கியை வீழ்த்தியது.
துருக்கி அணியை ஊதியது மாலி என்றே கூற வேண்டு, அதிக கோல்கள் வாங்காதது துருக்கியின் அதிர்ஷ்டமே.
நிறைய வாய்ப்புகளை நழுவ விட்ட பிறகு மாலி அணி 38-வது நிமிடத்தில் நடுக்கள வீஅர் ஜிமவ்சா த்ரோர் மூலம் முதல் கோலை அடித்தது.
பிறகு 68-வது நிமிடத்தில் முன்கள வீரர் லசானா தியாயே மூலம் 2-வது கோல் கண்டது. பிறகு 86-வது நிமிடத்தில் துருக்கியின் இரண்டு தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து ஃபோட் கொனாட்டே 3-வது கோலை அடித்தார்.
இந்தப் பிரிவில் மாலி அணி அக்டோபர் 12-ம் தேதி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது, துருக்கி அணி ஏற்கெனவே நியூஸிலாந்துடன் டிரா செய்ததையடுத்து வியாழனன்று கடினமான பராகுவே அணியைச் சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT