Published : 16 Sep 2017 10:32 AM
Last Updated : 16 Sep 2017 10:32 AM

ஆஸ்திரேலிய அணி 2 பேட்கள் நன்கொடை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் கையொப்பமிட்ட 2 பேட்கள் சென்னையில் உள்ள இந்தியா விஷன் தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய தூதர் சீயன் கெல்லி, வீரர்களின் கையொப்பமிட்ட பேட்களை இந்தியா விஷன் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினோத் டேனியலிடம் வழங்கினார். இந்த பேட்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை வறுமை சூழ்நிலையில் உள்ள சென்னையைச் சேர்ந்த குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x