Published : 15 Sep 2017 10:05 AM
Last Updated : 15 Sep 2017 10:05 AM
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான ஆரோன் பின்ச் காயத்தால் அவதிப்பட்டு வருதால் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் வரும் 17-ம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது ஆரோன் பின்ச் -க்கு வலது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவர், முழு உடல் தகுதியை பெறாவிட்டால் டிரெவிஸ் ஹெட் களமிறக்கப்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT