Published : 01 Sep 2017 03:51 PM
Last Updated : 01 Sep 2017 03:51 PM

2019 உ.கோப்பையில் தோனியுடன் யுவராஜ், ரெய்னா நடுவரிசையில் பலம் சேர்ப்பர்: சேவாக் கருத்து

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவந்தாலும் அணியில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவுக்கு இன்னமும் இடமளிக்க வாய்ப்புள்ளது என்று விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியதாவது:

முன்வரிசை வீரர்கள் சோபிக்காத போது யுவராஜ், ரெய்னா ஆகியோர் தோனியுடன் சேர்ந்து நடுவரிசையில் பலம் சேர்ப்பார்கள்.

இளம் வீரர்கள் அனுபவம் பெற நிறைய காலம் தேவைப்படும். ஒரு முக்கியமான, மையமான வீர்ர்கள் குழுவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்திய அணி மேலதிகமாக பரிசோதனைகளைச் செய்ய முடியாது.

இலங்கைத் தொடரில் யுவராஜ் சிங்குக்கு ‘ஓய்வு’ அளிக்கப்பட்டது உண்மையென்றால் வரும் தொடர்களில் மேலும் சில வீரர்களுக்கு ‘ஓய்வு’ அளிக்க வேண்டும். அதாவது அவர்கள் வார்த்தை உண்மையென்றால் வரும் தொடர்களில் மேலும் சிலருக்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பும்ரா விளையாட விளையாட அவர் மேலும் மெருகடைவார்.

என்றார் சேவாக். பும்ராவுக்கு மே.இ.தீவுகள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு அவர் கடைசியில் பும்ரா பற்றிக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x