Published : 18 Sep 2017 09:55 AM
Last Updated : 18 Sep 2017 09:55 AM
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக ப்ளே ஆப் சுற்றில் கனடாவுக்கு எதிராக இந்திய அணி ஆடி வருகிறது. இப்போட்டி எட்மான்டன் நகரில் நடக்கிறது. ஏற்கெனவே நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன. இந்நிலையில் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - பூர்வ ராஜா ஜோடி, ஜப்பானின் டேனியல் நெஸ்டர் - வசக் போஸ்பிசில் ஜோடியிடம் 5-7, 5-7, 7-5, 3-6 என்ற செட்கணக்கில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் கனடா அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT