Published : 15 Jan 2023 11:33 PM
Last Updated : 15 Jan 2023 11:33 PM

வரலாறு படைத்த இந்தியா | ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி

இந்திய அணி வீரர்கள்

திருவனந்தபுரம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் கோலி மற்றும் சுப்மன் கில் என இருவரும் சதம் விளாசி அசத்தினர். அதே போல சிராஜ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் இந்திய அணி இந்த தரமான வெற்றியை பெற்றது. தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் இந்த அபார ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்..

  • இந்தியா vs இலங்கை - 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2023
  • நியூஸிலாந்து vs அயர்லாந்து - 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி - 2008
  • ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் - 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி - 2015
  • தென் ஆப்பிரிக்கா vs ஜிம்பாப்வே - 272 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி - 2010
  • தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - 258 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி - 2012
  • இந்தியா vs பெர்முடா - 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - 2007

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x