Published : 03 Jan 2023 05:35 AM
Last Updated : 03 Jan 2023 05:35 AM

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரிஷப் பந்த் மாற்றம்

டேராடூன்: கார் விபத்தில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது ரூர்க்கிக்கு அருகில் விபத்துக்குள்ளானார். இதில் காயம் அடைந்த ரிஷப் பந்த், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துமவனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரிஷப் பந்த் மாற்றப்பட்டார். அவரது கால் பகுதியில் மட்டும் இன்னும் வலி இருப்பதாகவும் இப்போதைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x