Published : 17 Sep 2022 06:13 AM
Last Updated : 17 Sep 2022 06:13 AM

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக ராஜ் அங்கத் பாவா?

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் கனடாவின் யுஜின் பவுச்சார்டு அர்ஜெண்டினாவின் நாடியா பொடோரோஸ்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாடியா பொடோரோஸ்கோ 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-வது டி 20-ல் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டி 20 தொடரை 1-2 என இழந்தது. 123 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணி 10 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.

பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டான் கடந்த 1998-ம் ஆண்டு என்பிஏ இறுதிப் போட்டியில் அணிந்திருந்த சீருடை சுமார் ரூ.80.50 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சீருடை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதன்முறை.

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணியில் இளம் ஆல்ரவுண்டரான ராஜ் அங்கத் பாவா சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x