Published : 28 Oct 2016 03:29 PM
Last Updated : 28 Oct 2016 03:29 PM

ரஞ்சி கோப்பை: 36 ரன்களுக்கு சுருண்ட இமாச்சல அணி

குவாஹாத்தியில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பிரிவு சி போட்டியில் ஹைதராபாத் அணி இமாச்சல அணியை 36 ரன்களுக்குச் சுருட்டியது.

நேற்று 8/2 என்று இருந்த இமாச்சலம் இன்று வந்து மடமடவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 36 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டன் ரிஷி தவண் அதிகபட்சமாக 9 ரன்களை எடுத்தார்.

மற்ற பேட்ஸ்மென்களில் 5 பேர் ஸ்கோர்போர்டை தொந்தரவு செய்யவில்லை.

தொடக்க வீரர் பெய்ன்ஸ், ஆர்.பிஸ்ட், நிர்மோஹி, ஜைஸ்வால், குர்விந்தர் சிங் ஆகிய வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். எக்ஸ்ட்ராக்கள் என்ற அதிர்ஷ்டமும் இமாச்சல அணிக்கு லபிக்கவில்லை.

ஹைதராபாத் அணியில் ரவி கிரண் 3 விக்கெட்டுகளையும் ஏ.ஏ.பண்டாரி என்ற லெக் ஸ்பின்னர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இன்னிங்ஸில் மொத்தமே 5 பவுண்டரிகள்தான்.

தொடர்ந்து ஆடிவரும் ஹைதராபாத் அணியும் ரிஷி தவணிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 56 ரன்களை எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x