Published : 04 Oct 2016 10:01 AM
Last Updated : 04 Oct 2016 10:01 AM

மும்பை வெற்றியுடன் தொடக்கம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் எப்சி புனே சிட்டி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. 68-வது நிமிடத்தில் மும்பை அணியின் பெட்ரிகோ கோல் அடித்தார்.

இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. புனே அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குவாஹாட்டியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் - எப்சி கோவா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x