Last Updated : 23 Oct, 2016 12:36 PM

 

Published : 23 Oct 2016 12:36 PM
Last Updated : 23 Oct 2016 12:36 PM

ஹாக்கியில் டிரா செய்தது இந்தியா

மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆடவர் ஹாக்கியில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா 1-1 என டிரா செய்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் தென் கொரியா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஜியோங் இந்த கோலை அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

முதல் பாதியில் கிடைத்த பெனால்டி கார்னரை இந்திய வீரர்கள் சர்தார், ருபிந்தர் சிங் ஆகியோர் கோலாக மாற்ற தவறினர். இலக்கை நோக்கி ருபிந்தர் அடித்த பந்தை தென் கொரியா கோல்கீப்பர் அருமை யாக தடுத்தார்.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியாவின் லலித் உபாத்யாய் ரிவர்ஸ் பிளிக் செய்து அற்புதமாக கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அதன் பிறகு இரு அணிகள் தரப்பிலும் மேற்கொண்டு கோல் எதும் அடிக்கப்படாததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.இந்தியா தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x