Published : 23 Oct 2016 12:37 PM
Last Updated : 23 Oct 2016 12:37 PM

உலகக் கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன்

இந்தியா, தாய்லாந்து, ஈரான் உள்ளிட்ட 12 நாடுகள் கலந்து கொண்ட உலகக் கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா-ஈரான் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் அந்த அணி 18-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இந்திய அணியினர் ஆட்டத்தின் கடைசி பகுதியில் ஆக்ரோஷமாக விளையாடினர். 10 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் 25-21 என இந்தியா முன்னிலை வகித்தது. முடிவில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x