Published : 04 Aug 2022 02:49 AM
Last Updated : 04 Aug 2022 02:49 AM
மும்பை: ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளன. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வாரியம் அறிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதை அடுத்து, இந்த இரு தொடர்களிலும் டி20 போட்டிகளுக்கு முக்கியவத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதேபோல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தலா மூன்று டி20 போட்டிகளும், ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இரண்டாவது டி20 போட்டி, அக்டோபர் 2ம் தேதி கவுகாத்தியிலும், கடைசி டி20 போட்டி இந்தூரில் நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ம் தேதி லக்னோவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே ராஞ்சி மற்றும் டெல்லியில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT