Published : 01 Aug 2022 01:34 PM
Last Updated : 01 Aug 2022 01:34 PM

செஸ் ஒலிம்பியாட் 2022 | "ஆட்டம் கடினமாக இருந்தது ஏன்?" - ஹரி கிருஷ்ணா

ஹரி கிருஷ்ணா கூறும்போது, “முதல் 15 நகர்வுகள் வரை ஆட்டம் எளிதாக இருந்தது. அதன் பின்னர் மாஸ்ட்ரோவாசிலிஸ் டிமிட்ரியோஸ் சவால் கொடுக்க ஆரம்பித்தார்.

இறுதிக்கட்டத்தில் சில சிறப்பான நகர்வுகளால் வெற்றி பெற முடிந்தது. ஒவ்வொரு வெற்றியும் அணிக்கு முக்கியமானதுதான். 2-வது சுற்று ஆட்டம் எளிதான நகர்வுகளாக அமைந்தது. ஆனால் 3-வது சுற்றில் சில நகர்வுகளை தியாகம் செய்ய வேண்டியது இருந்தது.

போட்டியை வெல்லக்கூடிய நாடுகள் என கருதப்பட்ட சில முன்னணி அணிகள் தடுமாறுகின்றன என இப்போதே கூற முடியாது. ஏனெனில் 3 சுற்றுகள்தான் முடிவடைந்துள்ளன.

இன்னும் இரு சுற்றுகள் சென்றால்தான் அதுகுறித்து கூறமுடியும். பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் பின்னடைவு சந்திக்கும் முன்னணி அணிகள் பின்னர் மீண்டு வரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x