செஸ் ஒலிம்பியாட் 2022 | "ஆட்டம் கடினமாக இருந்தது ஏன்?" - ஹரி கிருஷ்ணா

செஸ் ஒலிம்பியாட் 2022 | "ஆட்டம் கடினமாக இருந்தது ஏன்?" - ஹரி கிருஷ்ணா
Updated on
1 min read

ஹரி கிருஷ்ணா கூறும்போது, “முதல் 15 நகர்வுகள் வரை ஆட்டம் எளிதாக இருந்தது. அதன் பின்னர் மாஸ்ட்ரோவாசிலிஸ் டிமிட்ரியோஸ் சவால் கொடுக்க ஆரம்பித்தார்.

இறுதிக்கட்டத்தில் சில சிறப்பான நகர்வுகளால் வெற்றி பெற முடிந்தது. ஒவ்வொரு வெற்றியும் அணிக்கு முக்கியமானதுதான். 2-வது சுற்று ஆட்டம் எளிதான நகர்வுகளாக அமைந்தது. ஆனால் 3-வது சுற்றில் சில நகர்வுகளை தியாகம் செய்ய வேண்டியது இருந்தது.

போட்டியை வெல்லக்கூடிய நாடுகள் என கருதப்பட்ட சில முன்னணி அணிகள் தடுமாறுகின்றன என இப்போதே கூற முடியாது. ஏனெனில் 3 சுற்றுகள்தான் முடிவடைந்துள்ளன.

இன்னும் இரு சுற்றுகள் சென்றால்தான் அதுகுறித்து கூறமுடியும். பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் பின்னடைவு சந்திக்கும் முன்னணி அணிகள் பின்னர் மீண்டு வரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in