Published : 20 May 2022 05:08 AM
Last Updated : 20 May 2022 05:08 AM

உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

குவாங்ஜு: வில்வித்தை உலகக் கோப்பை நிலை 2-ல் இந்திய மகளிர் அணி ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது.

தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிதி போர், கோமலிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கோமலிகா கூறும்போது, “பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த ஆட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் மூலம் சீன தைபேவுக்கு எதிராக தொடக்கத்திலேயே முன்னிலை பெற முடிவு செய்திருந்தோம். அதன்படியே போட்டியும் அமைந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x