Published : 07 Oct 2021 08:10 PM
Last Updated : 07 Oct 2021 08:10 PM
சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது தனது காதலிக்கு மோதிரம் அணிவித்துக் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர்.
சிஎஸ்கே அணியின் கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று பஞ்சாப் அணியுடன் நடைபெற்றது. இதில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில் இப்போட்டியில் சுவாரசியமான சம்பவம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், போட்டியின்போது தனது காதலை வெளிப்படுத்தும் விதமாகத் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்தார். இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் தனது நிச்சயதார்த்த நிகழ்வை உறுதி செய்தார் தீபக் சாஹர்.
சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
A special moment for @deepak_chahar9!
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Heartiest congratulations! #VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPL pic.twitter.com/tLB4DyIGLo
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT