Published : 28 Dec 2015 09:02 AM
Last Updated : 28 Dec 2015 09:02 AM
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் குறித்த நல்ல செய்தி விரைவில் வரும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹார்யர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹார்யர் கான் வெளியிட்டுள்ள கருத்தில், “இந்திய பிரதமரின் பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளிடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடப்பதற்குரிய சூழலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்த நல்ல செய்தி விரைவில் வரும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஷஹார்யர் கானின் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இஜாஸ் பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“இந்திய கிரிக்கெட் அணி நம்மோடு விளையாட விரும்ப வில்லை என்பது தெளிவான நிலையில், ஷஹார்யர் கான் ஏன் பழைய பல்லவியையே பாடிவருகிறார் என்று புரிய வில்லை” என்று அவர் கூறியுள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT