Last Updated : 10 Dec, 2015 09:04 AM

 

Published : 10 Dec 2015 09:04 AM
Last Updated : 10 Dec 2015 09:04 AM

உத்தரபிரதேச மல்யுத்த அணியை வாங்கினார் ரோஹித் சர்மா

ஐபிஎல் டி 20 தொடரை போன்று மல்யுத்த லீக் போட்டி இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்று முதல் வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 6 அணிகள் கலந்துகொள்கின்றன.

இதில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியின் இணை உரிமையாளராக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா மாறியுள்ளார். இந்தி நடிகர் தர்மேந்திராவுடன் இணைந்து அவர் இந்த அணியைய வாங்கியுள்ளார்.

உத்தரபிரதேச வாரியர்ஸ் அணியில் இந்திய நட்சத்திரங்களான யோகேஷ்வர் தத், சுஷில்குமார், பபிதா குமாரி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும்போது, "இந்தியாவுக்கும், மல்யுத்த போட்டிக்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. புரோ மல்யுத்த லீக் போட்டியில் அணியின் உரிமையாளராக இணைந்ததில் பெருமை கொள்கிறேன். இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x