Last Updated : 28 Dec, 2015 09:03 AM

 

Published : 28 Dec 2015 09:03 AM
Last Updated : 28 Dec 2015 09:03 AM

பாகிஸ்தான் வீரருக்கு தடை

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததைத் தொ டர்ந்து பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x