Published : 05 Oct 2015 10:33 AM
Last Updated : 05 Oct 2015 10:33 AM
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங் களிலும் நடைபெற்று வருகின்றன. இதில் கோவாவில் நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் கோவா எப்.சி மற்றும் டெல்லி டைன மோஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத் தில் ரோமியோ பெர்னாண்டஸ் பாஸ் செய்த பந்தை கோலாக மாற்றி மந்தர் தேசாய் கோவாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோவாவைச் சேர்ந்த ரீனால்டோ மற்றொரு கோலை அடித்து அந்த அணியியின் முன்னிலையை அதிகப்படுத்தினார்.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததை தொடர்ந்து 2-0 என்ற கோல்கணக்கில் கோவா அணி வெற்றிபெற்றது. இன்று மாலை நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே அணி மும்பை அணியை சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT