Published : 18 Oct 2015 03:02 PM
Last Updated : 18 Oct 2015 03:02 PM
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான போட்டிகள் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கிவைத்தார்.
கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், 45 பள்ளிகளில் இருந்து 56 அணிகளைச் சேர்ந்த 750 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.1.32 லட்சம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT