Published : 06 Oct 2015 10:11 AM
Last Updated : 06 Oct 2015 10:11 AM
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று புனே சிட்டி-மும்பை எப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் புனே அணி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஷன்லி இந்த கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக் கும் விதமாக 34வது நிமிடத்தில் மும்பை அணியின் பிக்யியோனி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலை வகித்தன.
இதனால் 2வது பாதி ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. 56வது நிமிடத்தில் புனே அணி 2வது கோலை அடித்தது. இந்த கோலையும் ஷன்லியே அடித்தார். சிறிது நேரத்தில் புனே அணி மீண்டும் கோல் அடித்து மும்பை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 70வது நிமிடத்தில் குருங் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். முடிவில் புனே 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT