Published : 19 Dec 2019 09:14 AM
Last Updated : 19 Dec 2019 09:14 AM
விசாகப்பட்டிணம் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஹெட்மையர் 28வது ஓவரில் கேட்சை விட்டார். ரோஹித்துக்குக் கேட்சை விடுவது பெரிய தவறு என்பதை உணர்ன்திருப்பார்கள் மேற்கிந்திய அணியினர்.
அதே போல் கடைசி 20 ஓவர்களில் 217 ரன்களை இந்திய அணி குவித்தது, இது இந்திய அணியின் சிறந்த கடைசி 20 ஓவர் ரன்களாகும். இந்த ஓவர்களில் அனாவசியமாக ஷ்ரேயஸ் அய்யருக்கு ஒரே ஓவரில் 4 சிக்சர்களை வாரிக்கொடுத்தார் காட்ரெல்.
இந்நிலையில் தோல்விக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கெய்ரன் பொலார்ட் கூறியதாவது:
பவுலிங்கில் கடைசி 20 ஓவர்களில் விட்டுக் கொடுத்து விட்டோம். ஆனால், எங்களை வீழ்த்த வேண்டுமெனில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்தால்தான் உண்டு என்பதையே காட்டுகிறது. எங்களுக்கு எதிராக பெரிய அளவில் ரன்களை எடுத்தால்தான் இந்தியா வெற்றி பெற முடியும்.
40-50 ரன்கள் குறைவாக கொடுத்திருந்தால் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ரோஹித் ராகுல் அபாரமாக ஆடியதால் பின்னால் வந்தவர்கள் சுதந்திரமாக ஆட முடிந்தது. ஷேய் ஹோப்பும் சீராக ஆடிவருகிறார்.
புதிர் விளையாட்டில் துண்டுகளை ஒன்றாக இணைக்க வேண்டும், அது போல்தான் இந்த அணியும், ஒருநாள் இரவில் நடந்து விடாது. தோல்வியினால் துவண்டு விடவில்லை நன்றாக ஆடுகிறோம் அதனால் தலைநிமிர்ந்தே நடக்கிறோம். இன்னும் இருநாட்களில் மீண்டு வந்து இன்னும் கடினமாக ஆடுவோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT