Published : 11 Nov 2019 03:28 PM
Last Updated : 11 Nov 2019 03:28 PM
டாக்கா, ஐ.ஏ.என்.எஸ்.
சூதாட்டப் புகாரில் சிக்கி ஓராண்டு உடனடித் தடையையும் இன்னுமொரு ஆண்டு இடைநிறுத்தத் தண்டனையையும் அனுபவித்து வரும் வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டிலிருந்து சற்றே கவனத்தைத் திருப்பி கால்பந்தாட்டம் பக்கம் சென்றுள்ளார்.
சூதாட்டம் தொடர்பாக புக்கி ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டதை ஐசிசி சூதாட்ட தடுப்பு அமைப்பிடமோ, வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகளிடமோ முறைப்படித் தெரிவிக்காமல் இருந்ததற்காக ஷாகிப் அல் ஹசன் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் "ஃபுட்டி ஹேக்ஸ்” என்ற உள்நாட்டு அணிக்காகக் கால்பந்தாட்டம் ஒன்றில் ஆடினார். கொரியன் எக்ஸ்பாட் என்ற அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ஷாகிபின் ஃபுட்டி ஹேக்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனை அந்த அணி தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஃபுட்டி ஹேக்ஸ் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளது.
ஷாகிப் தடை அக்டோபர் 29, 2020-ல் முடிவடைகிறது, இதனால் உலகக்கோப்பை டி20-யிலும் ஷாகிப் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT