Published : 26 Oct 2019 09:17 AM
Last Updated : 26 Oct 2019 09:17 AM
பாரீஸ்
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் போராடி தோல்வியடைந்தார்.
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 9-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 16-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் அன் சே யங்குடன் மோதினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சாய்னா நெவால் 20-22, 21-23 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
முதல் செட்டில் சாய்னா ஒரு கட்டத்தில் 20-19 என மிக நெருக்கமாக முன்னிலையில் இருந்தார். இந்த சூழ்நிலையில் அன் சே யங் தொடர்ச்சியாக 3 புள்ளிகளை குவித்து முதல் செட்டை தன்வசமாக்கினார். அதேவேளையில் 2-வது செட்டில் அன் சே யங் ஒரு கட்டத்தில் 16-11 என முன்னிலை வகித்தார்.
அப்போது கடும் சவால் அளித்த சாய்னா ஆட்டத்தை 18-18 என சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனால் ஆட்டம் பரபரப்பானது.
எனினும் பதற்றம் அடையான யங் அடுத்தடுத்து புள்ளிகளை சேர்த்து வெற்றியை வசப்படுத்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT