Published : 15 Sep 2019 05:33 PM
Last Updated : 15 Sep 2019 05:33 PM
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 22வது முறையாக பட்டம் வென்று இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாதனை புரிந்துள்ளார்.
மியான்மரில் நடைபெற்ற இந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேய் தவே ஊ என்ற வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதியில் மைக் ரஸலை 5-2 என்ற கணக்கில் வீழ்த்தி பங்கஜ் அத்வானி இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆண்டு இறுதிப் போட்டியும் கடந்த ஆண்டு இறுதிப்போட்டியும் ஒரே போட்டியாளர்களாக அமைந்து போனது.
கடந்த முறையும் அத்வானியிடம் நேய் தவே ஊ தோற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT