Published : 31 Jul 2015 09:12 AM
Last Updated : 31 Jul 2015 09:12 AM
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் நேற்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
2005-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரெய்னா அறிமுகமானார். அதன்பிறகு வேகமாக வளர்ச்சி கண்ட ரெய்னா, ஒருநாள் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக உருவெடுத்ததோடு, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனாகியிருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்துப் பேசிய ரெய்னா, “சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். இந்த 10 ஆண்டு பயணம் மிக மிக மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. இந்த பயணத்தை வியக்கத்தக்கதாக ஆக்கிய எனது குடும்பத்தினர், பிசிசிஐ, தேர்வாளர்கள், அணியின் சகவீரர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரையிலான எனது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக தொடர்ந்து என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடுவேன்” என்றார்.
28 வயதான ரெய்னா, 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் போட்டியில் விளையாடியபோது டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 218 ஒருநாள் போட்டிகளில் விளை யாடியுள்ள ரெய்னா 5,500 ரன் களைக் குவித்துள்ளார். அதில் 5 சதமும், 35 அரை சதங்களும் அடங்கும்.
டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி ஆகிய மூன்றிலும் சதமடித்த ஒரே இந்தியர் ரெய்னா தான். இரு உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள ரெய்னா, ஒரு சதம், இரு அரைசதம் உள்பட 358 ரன்கள் குவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT