Last Updated : 23 Jul, 2015 09:39 AM

 

Published : 23 Jul 2015 09:39 AM
Last Updated : 23 Jul 2015 09:39 AM

பிரேசில்-அர்ஜெண்டினா கால்பந்து போட்டி ரத்து

அமெரிக்காவில் வரும் செப்டம் பரில் நடைபெறவிருந்த பிரேசில்-அர்ஜெண்டினா அணிகள் இடையி லான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் (பிஃபா) நிகழ்ந்த ஊழல் எதிரொலியாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அர்ஜெண்டின அணியின் பயண விவகாரங்களை கையாண்டு வந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், “அர்ஜெண் டினா-பிரேசில் இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கான உரிமையை புல் பிளே ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனம் பெற்றிருந்தது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவருக்கும் பிஃபா ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதால் அர்ஜெண்டினாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதனால் போட்டி ரத்து செய்யப் பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x