Last Updated : 06 Jun, 2015 09:42 AM

 

Published : 06 Jun 2015 09:42 AM
Last Updated : 06 Jun 2015 09:42 AM

இங்கிலாந்து வீரர் கிரேக் கீஸ்வெட்டர் ஓய்வு

இங்கிலாந்து மற்றும் சோமர்செட் அணிகளின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கிரேக் கீஸ்வெட்டர் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற கவுன்டி சாம்பியன் ஷிப் போட்டியில் நார்தாம்ப்டன் ஷையர் அணிக்கு எதிராக பேட்டிங் செய்தபோது கீஸ்வெட்டரின் மூக்கில் தாக்கிய பந்து, கண்ணுக்கு கீழே உள்ள எலும்பையும் சேதப்படுத்தியது. இதன்பிறகு அவருடைய இடது கண்ணில் பார்வைக் கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக கீஸ்வெட்டரின் அதிரடி கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக கீஸ்வெட்டர் கூறுகையில், “இதற்கு முன்னர் விளையாடியதைப் போன்று அதிரடி பேட்ஸ்மேனாக இனிமேல் விளையாட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துவிட்டேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை த்ரில்லான ஒரு வாழ்க்கையாக அமைந்தது.

அதில் ஏராள மான ஏற்றங்களையும், அவ்வப் போது இறக்கங்களையும் சந்தித் திருக்கிறேன். நான் ஓய்வு பெறு வதற்கு இதுவே சரியான தருணம். எந்த வருத்தமும் இன்றி விடை பெறுகிறேன்” என குறிப்பிட்டுள் ளார்.

கீஸ்வெட்டர் இங்கிலாந்து அணிக்காக 46 ஒருநாள் போட்டி களிலும், 25 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளை யாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக் கவில்லை. இதுதவிர சோமர் செட் அணியின் முன்னணி பேட்ஸ் மேனாகத் திகழ்ந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x