Published : 06 Jul 2019 12:36 PM
Last Updated : 06 Jul 2019 12:36 PM
தோனி இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று இலங்கை பந்துவீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் தோனியின் ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் சிலர் விமர்சித்து வரும் வேளையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட வீரர்கள் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் விளையாடவுள்ள நிலையில் தோனிக்கு ஆதரவாக இலங்கை அணியின் நட்சத்திர பந்த்வீச்சாளர் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலிங்கா கூறும்போது, “ தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் வீரராக தோனி இருந்திருக்கிறார். எதிர்காலத்திலும் எந்த வீரராலும் அவரை வீழ்த்த முடியாது என்று நினைக்கிறேன்.
அவர் தனது அனுபவத்தையும், நெருக்கடியான நேரத்தில் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்ற அறிவுரையும் இளம் வீரர்களுக்கு அளிக்க வேண்டும்.
இந்தியா முன்னள் கேப்டன் தோனியுடன் சிறந்த அனுபவத்தில் உள்ளது. அதனால்தான் அவர்கள் வெற்றி அணியாக இருக்கிறார்கள்.
இந்தியா இந்தப் போட்டியில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமைமிக்க அணி என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT