Published : 06 Aug 2017 11:07 AM
Last Updated : 06 Aug 2017 11:07 AM
சிட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 200-ம் நிலை வீரரான இந்தியாவின் யுகி பாம்ப்ரி, 45-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆன்டர்சனை எதிர்த்து விளையாடினார். இதில் யுகி பாம்ப்ரி 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
இந்தத் தொடரில் கால் இறுதி வரை முன்னேறியதன் மூலம் யுகி பாம்ப்பரிக்கு சுமார் 90 புள்ளிகள் வரை கிடைக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் 150-வது இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT