Last Updated : 09 Aug, 2017 10:31 AM

 

Published : 09 Aug 2017 10:31 AM
Last Updated : 09 Aug 2017 10:31 AM

3-வது டெஸ்ட்டில் இருந்து ரங்கனா ஹெராத் விலகல்

முதுகுவலி காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் விலகியுள்ளார். இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி 12-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் விலகியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜெயசூர்யா, “கடுமையான முதுகுவலி காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் ரங்கனா ஹெராத் ஆடமாட்டார்” என்றார். குணரத்னே, சுரங்கா லக்மல், நுவன் பிரதீப் ஆகியோர் ஏற்கெனவே காயம் அடைந்துள்ள நிலையில் தற்போது ஹெராத்தும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x