Last Updated : 31 Aug, 2017 08:25 PM

 

Published : 31 Aug 2017 08:25 PM
Last Updated : 31 Aug 2017 08:25 PM

நீங்கள்தான் எப்போதும் எங்கள் கேப்டன்: 300-வது ஒருநாள் போட்டி காணும் தோனியிடம் கோலி உருக்கம்

தனது 300-வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் களம்கண்ட தோனிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி வெள்ளி மட்டை ஒன்றை பரிசாக அளித்தார்.

300-வது ஒருநாள் போட்டியில் தோனி மீண்டும் 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், தொடர்ந்து 3-வது முறையாக இந்தத் தொடரில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் தோனி.

இந்நிலையில் தோனிக்கு வெள்ளி பேட் ஒன்றைப் பரிசாக அளித்த கோலி கூறியதாவது:

“எங்களில் 90 சதவீதம் பேர் உங்கள் தலைமையின் கீழ்தான் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினோம். இந்த நினைவுப்பரிசை உங்களுக்கு அளிப்பது எங்களுக்கு கிடைத்த கவுரவம், நீங்கள்தான் எப்போதும் எங்கள் கேப்டன்” என்றார் கோலி உருக்கமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x