Published : 19 Jul 2016 09:38 AM
Last Updated : 19 Jul 2016 09:38 AM

ரவி சாஸ்திரி சாதனை சமன்

இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளாமோர்கன் - டெர்பி ஷையர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கிளாமோர்கன் அணியின் பேட்ஸ்மேன் அனேயுரின் டொனால்டு 123 பந்தில் இரட்டை சதம் விளாசினார்.

80 பந்தில் சதம் கடந்த அவர், அடுத்த 43 பந்தில் இரட்டை சதம் அடித்தார். 100, 150 மற்றும் 200 ரன்களை அனேரியுன் சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி 1985-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இதுதான் முதல் தர போட்டியி்ல் அதிவேக இரட்டை சதமாக இருந்து வருகிறது. இந்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் 19 வயதான அனேரியுன் டொனால்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x