Published : 18 Jun 2017 06:52 PM
Last Updated : 18 Jun 2017 06:52 PM

இந்தியாவுக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு 339 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மத்திய அரசு, பாகிஸ்தான் அணியுடனான இருதரப்பு போட்டிக்கு அனுமதி மறுத்து வருவதால், உலகளாவிய அளவிலான தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவாகியது. இதுவும் இன்றைய இறுதிப் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. ஃபக்கர் ஸமான் அதிகபட்சமாக 114 ரன்கள் எடுத்தார். அஸார் அலி 59 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்கள் புவனேஸ் குமார், ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x