Published : 09 Aug 2016 10:42 AM
Last Updated : 09 Aug 2016 10:42 AM

மனவ்ஜித் சிங் சந்த் ஏமாற்றம்

ரியோ ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலின் டிராப் பிரிவில் இந்திய வீரர் மனவ்ஜித் சிங் சந்த் ஏமாற்றம் அளித்தார்.

டிராப் பிரிவில் இந்திய வீரர்களன மனவ்ஜித் சிங் சந்த், கியான் செனய் பங்கேற்றனர். இதன் முதன் நான்கு சுற்றுகள் முடிவில், மனவ்ஜித் சிங் சந்த் 7வது இடம் பிடித்தார். கியான் செனய் 20வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பின் தனது கடைசி வாய்ப்பில், சிறப்பாக செயல்பட்ட சந்த் கடைசி நேரத்தில் கோட்டைவிட்டார்.

சந்த் மொத்தமாக 115 புள்ளிகள் (23,23,22,25,22 ) பெற்று 16-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டார். கியான் செனய் மொத்தமாக 114 புள்ளிகள் (22,23,22,24,23 ) பெற்று 19-வது இடம் பிடித்து வெளியேறினார்.

இப்போட்டியில் இத்தாலியின் ஜியோவானி 122 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். இங்கிலாந்து வீரர் எட்வர்ட் லிண்ட் (120) இரண்டாவது இடமும், குரோசியாவின் ஜோசிப் கிலாஸ்னோவிச் (120) மூன்றாவது இடமும் பிடித்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x