Published : 19 Jul 2016 09:39 AM
Last Updated : 19 Jul 2016 09:39 AM

கூடைப்பந்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி சாம்பியன்

அறந்தாங்கி கூடைப் பந்தாட்டக் கழகம் சார்பில் தேசிய அளவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி நடத்தபட்டது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை அரைஸ் ஸ்டீல் 82-52 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரி அணியை வென்றது.

மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி 48-45 என்ற புள்ளிக் கணக்கில் மயிலாடு துறை சாய் கூடைப்பந் தாட்டக் கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x