Last Updated : 13 Nov, 2014 08:10 PM

 

Published : 13 Nov 2014 08:10 PM
Last Updated : 13 Nov 2014 08:10 PM

ரோஹித் உலக சாதனையை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசி உலகசாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் 2-வது இரட்டை சதம் எடுத்ததோடு, சேவாகின் 219 ரன்கள் உலக சாதனையை முறியடித்து, முதன் முதலாக 250 ரன்களுக்கும் மேல் குவித்து 3 சாதனைகளை நிகழ்த்திய ரோஹித் சர்மாவுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

கேப்டன் தோனி:
மிகச்சிறப்பாக ஆடினாய் ரோஹித், இதுதான் அனைவருக்குமான ரோஹித் சர்மா. முழுத்திறமை.. அருமையான இன்னிங்ஸை மகிழ்வுடன் பார்த்து ரசித்தேன்.

ரவீந்திர ஜடேஜா தனக்கேயுரிய பாணியில்: ரோஹித் சர்மா, கடவுள் ராமருக்குப் பிறகு இலங்கைகு எதிராக சிறந்த இத்தகைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹர்பஜன் சிங்: இந்த சாதனை நிலைத்து நிற்கும். பார்க்க மிகவும் அபாரமாக இருந்த இன்னிங்ஸ். வரலாறு உருவாக்கியதற்காக பாராட்டுக்கள்.

அனில் கும்ளே: அடுத்த இலக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம். எதுவும் முடியும் (அவரால்), இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: நல்ல பேட்டிங் பிட்ச், வெகு சாதாரணமான பந்துவீச்சு, என்ற பேச்செல்லாம் நிலைக்காது, 173 பந்துகளில் 264 ரன்கள் என்பது சாதாரணமானடு அல்ல.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்:
முச்சதம் எடுக்கவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 2 ஒருநாள் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். என்னால் ஒரு சதம் கூட எடுக்க முடியவில்லை. யூஸ்லெஸ்.

இவ்வாறு அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x